இன்று பிற்பகல் குருனில் உள்ள ஹோபார்ட் முகாம் இலக்கு பயிற்சித் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு இராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.
மதியம் 12.30 மணிக்கு முதல் தகவல் கிடைத்ததையடுத்து, கோலா மூடா காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.
அறிக்கையின்படி, அந்த ஆண் மற்றும் பெண் வீரர்கள் அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தான் அப்துல் ஹலீம் மருத்துவமனைக்கு (HSAH) கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது




