பொருளாதார அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு நிறுவனமான யாயாசான் பெனராஜு அதன் தலைமைச் செயல் அதிகாரி இப்ராஹிம் சானி ஜூலை 1 முதல் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று அறிவித்து உள்ளது.
பொருளாதார அமைச்சரும், YP அறங்காவலர் குழுவின் தலைவருமான அக்மல் நசீர், இப்ராஹிமின் தலைமைத் துவத்தையும் பங்களிப்புகளையும், குறிப்பாக YP-ஐ ஒரு உத்திசார்ந்த மற்றும் மதிப்பு சார்ந்த பூமிபுத்ரா திறமையாளர் மேம்பாட்டு நிறுவனமாக வலுப்படுத்தி யதில் அவரது பங்களிப்பையும் பாராட்டினார்.
இந்தத் தலைமை மாற்றம், YP-யின் செயல்பாடுகள் மற்றும் உத்திசார்ந்த செயல்திட்டங்களின் தொடர்ச்சியைப் பாதிக்காது என்று அக்மல் கூறினார். இதில், 2030-ஆம் ஆண்டுக்குள் 100,000 பூமிபுத்ரா திறமையாளர்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பது மற்றும் 10,000 பேரைச் செயல்மிகு பொருளா தாரப் பங்களிப்பு மற்றும் உரிமையுடன் வளர்ப்பது ஆகிய அதன் இலக்குகளும் அடங்கும்.
அவரது அர்ப்பணிப்பையும் சேவை யையும் நாங்கள் மனதாரப் பாராட்டு கிறோம், மேலும் அவரது பயணத்தின் அடுத்த அத்தியாயத்தில் அவர் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்து கிறோம்.
நவம்பர் 2023-ல் இந்தப் பொறுப்பை ஏற்ற இப்ராஹிம், மலேசியாவின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களிக்கும் தொழில்முறை, வணிக மற்றும் சமூகத் தலைவர்களை வளர்ப்பதில் கவனம் செலுத்தி, யாயாசான் பெனராஜு-யை செல்வம் உருவாக்குவதிலிருந்து மதிப்பு உருவாக்கத்திற்கு மாற்றுவதற்குத் தலைமை தாங்கினார்.




