சுகாதார அமைச்சுடன் இணைந்து நடத்தப்பட்ட சோதனையின்போது, புக்கிட் பிந்தாங்கின் ஜலான் அலோர் (Jalan Alor) பகுதியில் உள்ள ஆறு உணவகங்கள் சுகாதாரத் தரநிலைகள் மோசமாக இருந்ததால் மூடப்பட வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகராண்மைக் கழகம் (DBKL) நேற்று இரவு உத்தரவிட்டது.
மொத்தம் 45 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் இந்த உணவகங்களும் அடங்கும்.
உரிமம் பெறுதல், உணவு கையாளுதல் விதிமுறைகள் மற்றும் புகைபிடித்தல் தொடர்பான விதிமீறல்களுக்காக 74 அறிவிப்புகளையும் அபராதங்களையும் பிறப்பித்ததாக DBKL வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“உணவு சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உரிம விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை தேவையான தரத்தில் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்,” என்று அது கூறியது.
அசுத்தமான சமையலறைகள், கிரீஸ் வடிகட்டிகள் (grease traps) இல்லாமை அல்லது பழுதடைந்திருத்தல், கரப்பான் பூச்சி மற்றும் எலித் தொல்லை, முறையற்ற உணவு சேமிப்பு, டைபாய்டு தடுப்பூசி அல்லது உணவு கையாளுதல் பயிற்சி பெறாத பணியாளர்கள் மற்றும் புகைபிடித்தல் தடை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்களுக்காக இந்த உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக DBKL தெரிவித்தது.




