மலேசியாவும் தாய்லாந்தும் எதிர்கொண்டு வந்த தீர்க்கப்படாத மீன்வளப் பிரச்சினைகள் தீர்க்கப் பட்டுவிட்டன என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் வேளாண்மை அமைச்சர்களும் இதற்குத் தங்கள் உறுதிப்பாட்டைத் தெரிவித்ததாகப் பிரதமர் கூறினார்.
“புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு மாதத்தில் நடைமுறைக்கு வர வேண்டும் என்று அவர்கள் விரும்பினர், ஆனால் நாங்கள் அதை ஒரு வாரத்தில் நடைமுறைக்குக் கொண்டுவர ஒப்புக்கொண்டுள்ளோம்,” என்று அன்வர், தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விரகுலுடன் இன்று வியாழக்கிழமை (ஜூலை 9) இங்கு நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
இணக்கமான தீர்வுகளைக் காண்பதற்காக இரு வேளாண்மை அமைச்சர்களுக்கும் இடையே முன்னதாக நடைபெற்ற சந்திப்பை வரவேற்பதாக அனுதின் கூறினார். இது மீன்வளம் மற்றும் வேளாண் பொருட்களுக்கான சந்தை அணுகல் தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் சம்பந்தப்பட்டது என்று அனுதின் தெரிவித்தார்.
தாய் கடல் பாஸ் மற்றும் ஐந்து இறால் இனங்கள் மீதான இறக்குமதி மீதான கடுமையான கட்டுப்பாடுகளை மலேசியா முன்னதாக ஜூன் 1 முதல் அமல்படுத்து வதாக அறிவித்திருந்தது.
வேளாண்மை ஒத்துழைப்பு தொடர்பாக இரு நாடுகளின் வேளாண்மை அமைச்சர்களுக்கும் இடையே நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தப் பரிமாற்றத்தை அன்வரும் அனுதினும் முன்னதாகக் கண்டுகளித்தனர்.
மத்திய தரைக்கடல் பாணியிலான நகர்ப்புற வாழ்க்கை முறை மலேசியா சார்பில் வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ செரி முகமது சாபுவும், தாய்லாந்து சார்பில் அதன் வேளாண்மை மற்றும் கூட்டுறவு அமைச்சர் சூரியா ஜங்ருங்ரியாங்கிட்டும் கலந்துகொண்டனர்.
ஒரு அறிக்கையில், வேளாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு அம்சங்களைத் தொடும் ஒரு விரிவான கட்டமைப்பை வழங்குகிறது என்று கூறியுள்ளது.
இதில் பயிர், கால்நடை வளர்ப்பு, மீன்வளம், வர்த்தகத்தை எளிதாக்குதல் மற்றும் வேளாண் பொருட்கள் சந்தைப் படுத்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் மேம்பாடு, தாவர சுகாதாரம் மற்றும் சுகாதார நடவடிக்கை கள் உள்ளிட்ட பிற ஒப்புக்கொள்ளப்பட்ட அம்சங்கள் அடங்கும்.




