Vimarsagan Media

Home » Malaysia » ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர் வருகை சுமார் 70%-ஐ எட்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது

ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர் வருகை சுமார் 70%-ஐ எட்டும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது

நாளை நடைபெறவுள்ள ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர் வருகை சுமார் 70%-ஐ எட்டும் என்று தேர்தல் ஆணையம் (EC) எதிர்பார்க்கிறது. தேர்தல் பிரச்சாரக் காலத்தில் மக்களிடையே காணப்பட்ட மிகுந்த ஆர்வமும், வாக்களிப்பதில் வாக்காளர் களுக்கு இருந்த உற்சாகமும் இந்த மதிப்பீட்டிற்கான அடிப்படையாக அமைந்ததாக தேர்தல் ஆணையத் தலைவர் ராம்லான் ஹருன் தெரிவித்தார்.

“இம்முறை வாக்களிப்பதில் ஆர்வம் அதிகமாக இருப்பதை நாங்கள் கவனித்துள்ளோம். தொடர்ந்து நடைபெற்று வரும் பிரச்சாரத்தின் அடிப்படையில், வாக்காளர் வருகை சுமார் 70%-ஐ எட்டக்கூடும் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது,” என்று அவர் கூறியதாக ‘பெர்னாமா’ செய்தி நிறுவனம் இன்று தெரிவித்தது.

தேர்தல் செயல்முறையின் முக்கியத்துவம் குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வும் இந்த மதிப்பீட்டிற்கு ஒரு காரணமாக அமைந்ததாக அவர் குறிப்பிட்டார். 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற மாநிலத் தேர்தலில் வாக்காளர் வருகை 54.9% ஆக இருந்தது; கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் மற்றும் அரசியல் சலிப்பு ஆகியவை இதற்குக் காரணங்களாகக் கருதப்பட்டன.

மாநிலத் தேர்தலில் வாக்களிக்க சுமார் 2.7 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக ராம்லான் கூறினார். “பதினேழு வாக்குச்சாவடிகள் பிற்பகல் 2 மணிக்கும், 42 வாக்குச்சாவடிகள் மாலை 4 மணிக்கும், 1,114 வாக்குச்சாவடிகள் மாலை 6 மணிக்கும் மூடப்படும்,” என்று அவர் கூறினார்.

வாக்குப்பதிவு செயல்முறையைக் கண்காணிக்க 43,036 தேர்தல் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ராம்லான் தெரிவித்தார். மேலும், 24,677 அஞ்சல் வாக்குச் சீட்டுகள் வழங்கப் பட்டுள்ளதாகவும், அவை நாளை மாலை 6 மணிக்குள் தேர்தல் ஆணையத்தைச் சென்றடைய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top