Vimarsagan Media

Home » Malaysia » மலேசியாவில் இஸ்ரேலியர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார்

மலேசியாவில் இஸ்ரேலியர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்: அன்வார்

இஸ்ரேலியக் குடிமக்கள் மலேசியாவு க்குள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்ற தெளிவான கொள்கையை மலேசியா கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.

அண்மையில், ஜொகூரில் இரட்டைக் குடியுரிமை ஆவணங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டினர் நடமாடியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதைச் சுட்டிக்காட்டி அன்வார் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இந்த விவகாரத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அமைச்சு இது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கும்,” என்று அவர் கூறினார்.

Scroll to Top