பெட்டாலிங் ஜெயா: முன்னாள் கோலா லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் மீதான ஊழல் விசாரணை எந்த நிலையில் உள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதா, தண்டனை வழங்கப்பட்டதா அல்லது குற்றமற்றவர் என விடுவிக்கப்பட்டாரா என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வத் தகவலும் பொதுவெளியில் வெளியாகவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
1990 முதல் 1995 வரை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த குவா கியா சூங் (Kua Kia Soong), இந்த விஷயத்தில் நிலவும் தெளிவின்மை பொறுப்புக்கூறல் இடைவெளியை உருவாக்கியுள்ளதாகவும், ஊழல் விசாரணையை மேற்கொள்ளும் அமைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் கூறினார்.
“குற்றவியல் ரீதியான தவறுக்கான ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்திருந்தால், ஏன் வழக்கு தொடரப்படவில்லை?” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
“போதுமான ஆதாரங்கள் இல்லை என்று புலனாய்வாளர்கள் முடிவு செய்திருந்தால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது குறித்து ஏன் மக்களுக்குத் தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை? என்றார்




