பெட்டாலிங் ஜெயா: தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) புதிய தலைவராகவும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) டத்தோ இர். டி.எஸ். ஷம்சுல் அமாட்டை மார்ச் 1, 2026 முதல் நியமிப்பதாக அறிவித்துள்ளது.
மார்ச் 2024 முதல் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றிய டத்தோ இர். மெகாட் ஜலாலுதீன் மெகாட் ஹாசனின் பதவிக்காலம் பிப்ரவரி 28, 2026 அன்று முடிவடைந்ததை அடுத்து இவர் நியமிக்கப்படுகிறார்.
ஷம்சுல் இப்போது தெனாகா நேஷனல் பெர்ஹாட்டின் தலைமை ஒழுங்குமுறை மற்றும் பங்குதாரர் மேலாண்மை அதிகாரி பதவியை வகிக்கிறார்




