உலக உடல் பருமன் கூட்டமைப்பின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் ஐந்து முதல் 19 வயதுடைய சுமார் 2.85 மில்லியன் மலேசிய குழந்தைகள் உடல் பருமனாகக் கருதப்பட்டனர்.
உலக உடல் பருமன் அட்லஸ் 2026, ஐந்து முதல் ஒன்பது வயதுடைய 866,000 குழந்தைகள் உடல் பருமனாகவும், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 1.9 மில்லியன் குழந்தைகள் உடல் பருமனாகவும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் அதிக எடை அல்லது பருமனான பள்ளி மாணவர் களின் எண்ணிக்கை 3.1 மில்லியனைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள் சுமார் 305,000 குழந்தைகள் உயர் இரத்த அழுத்தத்தின் ஆரம்ப அறிகுறிகளைக் அடைவர் என்றும், 382,000 பேர் 2040 ஆம் ஆண்டுக் குள் உடல் பருமனால் ஏற்படும் இருதய நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.




