புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனை யின் நுழைவாயிலுக்கு அருகில் உள்ள ஓர் இந்து கோவிலை உள்ளடக்கிய ஒரு திட்டமிட்ட கூட்டம் குறித்து மதபோதகர் ஜம்ரி வினோத் எழுதிய பேஸ்புக் பதிவு தொடர்பாக காவல்துறைக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து பினாங்கு காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ரேயர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 3) புகார் அளித்ததை பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 505(c) மற்றும் 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233(1) இன் கீழ் விசாரணைகள் நடத்தப்படுகின்றன,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஆத்திரமூட்டும் கூறுகளுடன் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்பவோ அல்லது நாட்டில் தீய நோக்கம் மற்றும் இன விரோதத்தைத் தூண்டக்கூடிய ஊகங்களை உருவாக்கவோ வேண்டாம் என்று அசிசி பொதுமக்களை வலியுறுத்தினார்.




