Vimarsagan Media

Home » Malaysia » மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் :- 71 வயது முதியவர்,நீதிமன்றக் காவலில்

மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் :- 71 வயது முதியவர்,நீதிமன்றக் காவலில்

இங்குள்ள தாமான் கோத்தாஜெயாவில் உள்ள ஓர் உணவகத்தில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 71 வயது முதியவர், ஏழு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை சந்தேக நபர் இங்குள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, நீதித்துறை நடுவர் நூர்கலிடா ஃபர்ஹானா அபு பக்கர், இன்று முதல் அமலுக்கு வரும் இந்த நீதிமன்றக் காவல் உத்தரவைப் பிறப்பித்தார்.

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-இன் கீழ் கொலைக் குற்றத்திற்காக விசாரிக்கப்பட்டு வரும் அந்த சந்தேக நபர், காவல்துறையினரின் பாதுகாப்புடன் கைவிலங்குகளுடன் காலை 9 மணிக்கு நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

நேற்று, ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாத், இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு வியட்நாமியப் பெண் கொல்லப்பட்ட இந்தத் துப்பாக்கிச் சூட்டிற்குப் பின்னால் தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்புவதாகக் கூறினார்.

பிற்பகல் 1.30 மணிக்கு நடந்த இந்தச் சம்பவத்தில், 37 முதல் 63 வயதுக்குட்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர்.

செல்லுபடியாகும் துப்பாக்கி உரிமம் வைத்திருந்த சந்தேக நபர், துப்பாக்கிச் சூடு நடந்த 30 நிமிடங்களுக்குப் பிறகு, சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபருக்கு இதற்கு முன் எந்தக் குற்றப் பதிவும் இல்லை என்பதை சோதனைகள் உறுதிப்படுத்தின

Scroll to Top