கடந்த ஜூன் 15 அன்று மெனோரா சுரங்கப்பாதை அருகே கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய பேருந்தை நிறுத்தி, 21 பயணிகளைக் காப்பாற்றியதற்காக, ஒரு லாரி ஓட்டுநருக்கு மலேசிய சாலைப் பாதுகாப்பு மன்றம் (MKJR) சார்பில் RM10,000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டு உள்ளது.
ஒரு பெரும் துயரச் சம்பவமாக மாறியிருக்கக்கூடிய ஒரு நிகழ்வைத் தடுத்த, வோங் டக் மெங்கின் உயிர்காக்கும் தலையீட்டிற்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.இதன் விளைவாக, MKJR அவருக்கு ஒரு சிறப்புப் பாராட்டுச் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளது.
“உயிர்களைக் காப்பாற்ற உதவிய அவரது சிறந்த செயல்களைப் பாராட்டும் விதமாக, RM10,000 ரொக்கப் பரிசை வழங்க மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தனது உரையில் கூறினார்.
அவசரகாலத்தின் போது வோங்கின் தைரியமும் விரைவான சிந்தனையும் இல்லையென்றால், இந்தச் சம்பவம் பேரழிவில் முடிந்திருக்கும் என்று லோக் கூறினார்




