டோக்கியோவில் நடைபெற்ற போட்டியில், ஜப்பானின் அகனே யமகுச்சியை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி, இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் முதன்முறையாக இப்பட்டத்தை வென்றார அடுத்த மாதம் புது டில்லியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில், சொந்த மண்ணில் பதக்கம் வெல்வதை இந்திய வீராங்கனை புசர்லா வெங்கட சிந்து தனது இலக்காகக் கொண்டுள்ளார்.
டோக்கியோ: இந்திய பேட்மிண்டன் நட்சத்திரம் புசர்லா வெங்கட சிந்து, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற ஜப்பான் ஓபன் போட்டியில் வெற்றி பெற்று, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு களாக நீடித்த பட்ட வெற்றி வறட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தார். இந்த வெற்றி தனக்கு “மிகுந்த நம்பிக்கையை” அளிப்பதாக அவர் கூறினார்.
2019-ல் உலக சாம்பியனாகவும், 2016-ல் ஒலிம்பிக் வெள்ளிப் பதக்கம் வென்றவராகவும் திகழும் சிந்து, டோக்கியோவில் ஜப்பானின் அகனே யமகுச்சியை 21-17, 21-17 என்ற கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக இப்பட்டத்தை வென்றார்.
லக்னோவில் நடைபெற்ற சையத் மோடி இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, அவர் வெல்லும் முதல் பட்டம் இதுவாகு. அடுத்த மாதம் புது தில்லியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சொந்த மண்ணில் பதக்கம் வெல்வதை சிந்து தனது இலக்காகக் கொண்டுள்ளார்; ஜப்பானில் கிடைத்த இந்த வெற்றி தனது வாய்ப்பை அதிகரிக்கும் என்று அவர் கூறினார்.




