பினாங்கு மாநிலத்தின் புதிய மாநிலச் செயலாளராக டத்தோ டாக்டர் ஜஃப்ரி அப்துல் ஜலில் நியமிக்கப்பட்டுள்ளார்; இந்த நியமனம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) முதல் நடைமுறைக்கு வருகிறது.
முன்னதாகப் பிரதமர் துறையின் கீழ் உள்ள ஆராய்ச்சிப் பிரிவின் துணைத் தலைமை இயக்குநராக (பகுப்பாய்வு) பணியாற்றிய 58 வயதான ஜஃப்ரி, ஆராய்ச்சி, கொள்கை உருவாக்கம், உத்திசார் திட்டமிடல் மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் ஆகியவற்றில் 32 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் என்று அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் (Tan Sri Shamsul Azri Abu Bakar) தெரிவித்தார்.
“ஐக்கிய இராச்சியத்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிக்கல் சயின்ஸ் (London School of Economics and Political Science) நிறுவனத்தில் அனைத்துலக உறவுகள் துறையில் முனைவர் பட்டம் (PhD) பெற்ற ஜஃப்ரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
“ஆராய்ச்சி, கொள்கை மற்றும் உத்திசார் திட்டமிடல் ஆகியவற்றிலும், பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகளிலும் அவருக்கு 32 ஆண்டுகால விரிவான அனுபவம் உள்ளது,” என்று ஷம்சுல் அஸ்ரி திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஜஃப்ரி, கிழக்கு சபா பாதுகாப்பு கட்டளை மையம் (ESSCOM), தேசிய பொது நிர்வாக நிறுவனம் (INTAN) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) ஆகிய வற்றிலும் பணியாற்றியுள்ளார் என்று ஷம்சுல் அஸ்ரி கூறினார்.
ஜஃப்ரியின் நிபுணத்துவம், அனுபவம் மற்றும் தலைமைத்துவப் பண்புகள் ஆகியவை, பினாங்கு மாநில நிர்வாகத் தை திறம்பட வழிநடத்தவும், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லவும், மக்களின் தொடர்ச்சியான நலனுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான உத்திசார் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அவருக்கு உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்




