Vimarsagan Media

Home » Malaysia » நாடி தையல் திறன் பயிற்சியை முடித்தவர்கள் தாங்கள் கற்ற திறன்கள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்ப

நாடி தையல் திறன் பயிற்சியை முடித்தவர்கள் தாங்கள் கற்ற திறன்கள் மூலம் வருமானம் ஈட்ட வாய்ப்ப

நாடி NADI’ பள்ளிச் சீருடைத் திட்டம், குடும்பங்கள் மலிவு விலையில் பள்ளித் தேவைகளை வாங்க உதவுவது மட்டுமல்லாமல், ‘NADI’ தையல் திறன் பயிற்சியை முடித்தவர்கள் தாங்கள் கற்ற திறன்கள் மூலம் வருமானம் ஈட்டவும் வாய்ப்புகளை வழங்குகிறது.

தேசிய தகவல் பரவல் மையத்தின் (NADI) கீழ் வழங்கப்படும் ‘NADI Mahir Jahit’ (தையல் திறன்) திட்டத்திலிருந்தே இந்த முயற்சி உருவானதாகக் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் தெரிவித்தார். இத்திட்டம் இல்லத்தரசிகள் மற்றும் தனித்தாய்வுகள் தையல் திறன்களைக் கற்றுக்கொண்டு, பின்னர் அத்திறன்களைக் கொண்டு குடும்ப வருமானத்தை ஈட்ட வாய்ப்பளிக்கிறது.

“2,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ‘NADI Mahir Jahit’ திட்டத்தில் இணைந்து ள்ளனர்; இத்திட்டம் தற்போது தனது நான்காவது கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்திலிருந்தே ‘NADI’ பள்ளிச் சீருடைத் திட்டம் உருவானது.

“ஏற்கனவே இத்திறன்களைக் கொண்ட பயிற்சியை முடித்தவர்களுக்கு, சமூகத்திற்கு மலிவு விலையில் விற்பனை செய்வதற்கான பள்ளிச் சீருடைகளைத் தயாரிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இது நான் முழுமையாக ஆதரிக்கும் ஒரு முயற்சியாகும்,” என்று அவர் இன்று தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.

தனது ‘வாழ்நாள் கற்றல்’ (Lifelong Learning) பிரிவின் மூலம், பின்தங்கிய மற்றும் விளிம்புநிலை மக்கள் கல்வி மற்றும் திறன் பயிற்சியைப் பெறுவதற்கான தளத்தை NADI வழங்குகிறது. இதில் NADI TINYTECHIE, NURTURE EKELAS மாணவர்கள், NADI E-Sports, NADI Rakyat Tuition, NADI சைபர் பாதுகாப்பு, NADI திறன்கள் (தையல், சமையல், சாதனங்கள் பழுதுபார்த்தல், புகைப்படம்/வீடியோ, ஸ்மார்ட் விவசாயம், ICT அறிவு) மற்றும் NADI AI திட்டம் ஆகியவை அடங்கும்.

Scroll to Top