கோத்தாதிங்கியில் பிறந்ததிலிருந்து தன்னால் பராமரிக்கப்பட்டு வந்த 16 மாதக் குழந்தையைத் தாக்கி, அதன் மீது ஏறி மிதித்ததன் விளைவாக அக்குழந்தை உயிரிழந்தது.
திருமணத்திற்குப் புறம்பாகப் பிறந்த அக்குழந்தையை, ஜொகூரில் உள்ள தொழிற்கல்லூரி ஒன்றில் படித்துக் கொண்டிருந்த 18 வயதுடைய தாய், 39 வயதுடைய அந்தப் பெண்ணின் பராமரிப்பில் விட்டுச் சென்றிருந்ததாக ஜொகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ அப் ரஹமான் அர்சாட் தெரிவித்தார்.
பிறந்ததிலிருந்தே அக்குழந்தை அந்தப் பெண்ணுடனும், அவரது கணவருடனும் (குழந்தையின் வளர்ப்புப் பாட்டனார்) வசித்து வந்ததாக அவர் கூறினார்.
அந்தப் பாட்டி குழந்தையைத் தாக்கியதாகவும், கைகள் மற்றும் கால்களால் அடித்ததுடன் அதன் மீது ஏறி மிதித்ததாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது,” என்று இன்று ஜொகூர் காவல் துறைத் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
கோத்தா திங்கியின் தாமான் ஸ்ரீ சௌஜானாவில் உள்ள தங்கள் வீட்டில் தூங்கிக்கொண்டி ருந்த குழந்தை அசைவற்ற நிலையில் காணப்பட்டதாகக் கூறி, ஜூலை 31 அன்று காலை 9.30 மணிக்குச் சந்தேகநபர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ரஹமான் தெரிவித்தார்.
குழந்தையை எழுப்ப மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
“மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தி ற்கு வரவழைக்கப்பட்டு இதய-நுரையீரல் மீளுயிர்ப்பு (CPR) சிகிச்சை அளிக்கப் பட்டது; இருப்பினும், அன்று காலை 10.30 மணிக்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக உறுதிப் படுத்தப்பட்டது.
“ஆரம்பத்தில், கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாகக் கூறி, 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-ன் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப் பட்டது,” என்று அவர் கூறினார்.
இருப்பினும், ஆகஸ்ட் 2 அன்று காலை 10.15 மணிக்கு பாசிர் கூடாங் (Pasir Gudang) மருத்துவமனையில் தடயவியல் மருத்துவ நிபுணரால் நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குழந்தையின் வயிறு மற்றும் மார்புப் பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான தாக்கத்தினால் (blunt-force trauma) மரணம் நிகழ்ந்தது கண்டறியப்பட்டது.
“குழந்தையின் உடலில் காயங்கள் மற்றும் சிராய்ப்புகளும் இருந்தன; இவை மரணத்திற்கு வழிவகுத்த கொடுமைப் படுத் தலால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
இதையடுத்து, காவல் துறையினர் இவ்வழக்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காக மாற்றியமைத்தனர்; மேலும், விசாரணைக்கு உதவும் வகையில் அந்த வளர்ப்புப் பாட்டி, அவரது கணவர் மற்றும் குழந்தையின் தாய் ஆகியோரைக் கைது செய்தனர்.
மூவருக்கும் முன்னதாகக் குற்றப் பின்னணி ஏதுமில்லை என்பதும், சிறுநீர் பரிசோதனையில் போதைப்பொருள் பயன்பாடு எதுவும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்ததாக ரஹமான் கூறினார்.




