பீப்பிள் பத்திரிகையின்படி, ஜம்ஷீர் அதானிக்கல் என அடையாளம் காணப்பட்ட 36 வயதான அந்த சந்தேக நபர், சமீபத்தில் மலேசியாவிலிருந்து இந்தியாவிற்குப் புறப்பட்ட அந்த விமானத்தில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணி முதல் 11 மணிக்குள் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், ஜம்ஷீர் 12A இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் ஒரு காவல்துறை அதிகாரி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கை மேற்கோள் காட்டியுள்ளது என கோஸ்மோ! ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்தவிதத் தூண்டுதலும் இன்றி, அவர் அவசரகால வெளியேறும் கதவைத் திறக்க முயன்று, ஜன்னல் பலகையைச் சேதப்படுத்தினார்.
“அவரைத் தடுக்க முயன்ற மற்ற பயணிகளையும் விமானப் பணியாளர்களையும் அவர் மிரட்டினார்,” என்று அந்த அதிகாரி கூறினார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்தச் சம்பவத்தின் காணொளிக் காட்சிகளில், பல விமானப் பணியாளர்கள் ஜம்ஷீரை ஜிப் டை கொண்டு கட்டுப்படுத்துவது காணப்பட்டது.
குற்றவியல் மிரட்டல், பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றத் தவறியது மற்றும் பொதுப் பாதுகாப் பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தது ஆகிய சந்தேகத்தின் பேரில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.




