ஞாயிற்றுக்கிழமையன்று காலமான மலேசிய ஹாக்கி ஜாம்பவான் சர்ஜித் சிங்கின் உடல், இன்று பிற்பகல் இங்குள்ள ஜலான் லோக் யூவில் உள்ள ஷம்ஷான் பூமி தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது.
தேசிய ஆண்கள் ஹாக்கி அணியின் முன்னாள் தலைவரும் பயிற்சியாளரு மான அவருக்கு வயது 63.
அவரது உடல் சுபாங் ஜெயாவில் உள்ள அவரது இல்லத்திலிருந்து காலை 9 மணிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, காலை 10 மணியளவில் தகன மையத்தை வந்தடைந்தது.
இறுதிச் சடங்குகளின் போது, அவரது மனைவி குல்வந்த் கவுர், மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளிட்ட குடும்பத்தினரும் நண்பர்களும் தங்கள் துயரத்தை அடக்க முடியாமல் தவித்ததால், தகன மைய வளாகமே சோகத்தில் மூழ்கியிருந்தது.
ஹாக்கி விளையாட்டுத் துறையைச் சேர்ந்த முன்னாள் தேசிய வீரர்களான சுக்ரி அப்துல் முத்தலிப், தெங்கு அகமட. தாஜுதீன் அப்துல் ஜலில், மனிந்தர்ஜித் சிங் மற்றும் பல்ஜித் சிங் ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்தியவர்களில் அடங்குவர்.
மேலும், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் மோர்டி பிமோல், தேசிய விளையாட்டு வீரர்கள் நல அறக்கட்டளையின் தலைவர் அகமது ஷபவி இஸ்மாயில் மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு அறக்கட்டளையின் (YPPK) தலைவர் நூருல் அரிஃபின் அப்துல் மஜீத் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சர்ஜித் சிங் லாஸ் ஏஞ்சல்ஸ் (1984) மற்றும் பார்சிலோனா (1992) ஆகிய இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார். மேலும், புது தில்லியில் நடைபெற்ற 1982 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பெய்ஜிங்கில் நடைபெற்ற 1990 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தேசிய அணி வெண்கலப் பதக்கங்களை வெல்ல உதவினார்.
வீரராக ஓய்வு பெற்ற பிறகு பயிற்சியாளராக மாறிய அவர், 2007 முதல் 2008 வரை தேசிய அணிக்கு வழிகாட்டினார்; பின்னர் மார்ச் 2024 முதல் மார்ச் 2026 வரை அணியை வழிநடத்த மீண்டும் அழைக்கப்பட்டார்




