காற்று மாசு (haze) நிலவினாலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய தினக் கொண்டாட்டங்கள் தொடர்ந்து நடைபெறும்; எனினும், அதன் அளவு அல்லது இடம் மாற்றப்படலாம் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் பஹ்மி ஃபட்ஸில் இன்று தெரிவித்தார்.
இன்று பிற்பகல் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் (KSN) மற்றும் தொடர்புடைய அமைச்சகங்கள், முகமைகளுக்கு இடையிலான கூட்டத்திற்குப் பிறகு இது குறித்த முடிவு எடுக்கப்படும் என்று ஃபஹ்மி கூறினார்.
அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் காற்று மாசு நிலவரம், அத்துடன் பங்கேற்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டே இந்த மதிப்பீடு அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.
“நாங்கள் அதை ரத்து செய்யப்போவ தில்லை, ஆனால் கொண்டாட்டத்தின் அளவு அல்லது இடம் மாற்றப்படலாம். இன்று பிற்பகல் நடைபெறவுள்ள தலைமைச் செயலாளரின் கூட்டத்தின் முடிவிற்காக நாங்கள் காத்திருப்போம்,” என்று அவர் தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
2026-ஆம் ஆண்டிற்கான தேசிய தினக் கொண்டாட்டங்கள், ஆகஸ்ட் 31-ஆம் தேதி காலை 7 மணி முதல் ‘டத்தாரான் புத்ராஜெயா’ (Dataran Putrajaya) பகுதியில் நடைபெறவுள்ளன.
தகவல் தொடர்பு, இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, வானிலை ஆய்வு, கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளைச் சார்ந்த அமைச்சகங்கள் இந்த மதிப்பீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.




