Vimarsagan Media

Home » Malaysia » அமைச்சரவையிலிருந்து டிஏபி அமைச்சர்கள் விலக வேண்டும் என்கிற கோரிக்கைக: அமிருதீன் நிராகரித்தார்.

அமைச்சரவையிலிருந்து டிஏபி அமைச்சர்கள் விலக வேண்டும் என்கிற கோரிக்கைக: அமிருதீன் நிராகரித்தார்.

டத்தோ ஸ்ரீ நஜிப் ரசாக் கோரியுள்ள பொதுமன்னிப்பு விவகாரத்தால், அமைச்சரவையில் உள்ள டிஏபி அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி நிராகரித்துள்ளார்;

அதற்குப் பதிலாக, தங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணையை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துமாறு பக்காத்தான் ஹராப்பான்

கூட்டணியை அவர் வலியுறுத்தி யுள்ளார்.

பாகத்தான் கூட்டணியின் தேசியத் தேர்தல் இயக்குநருமான அவர், கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் கருத்துகள் மதிக்கப்பட வேண்டும் என்றாலும், தங்களுக்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்ற இன்னும் சுமார் ஓராண்டு காலம் உள்ளது என்று கூறினார்.

“குறைந்தபட்சம் அரசாங்கத்தை வழிநடத்திச் செல்வதற்காகவேனும், கடந்த தேர்தலில் பாகத்தான் அதிக எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியது,” என்று புத்ராஜெயாவில் உள்ள ‘லெ மெரிடியன்’ (Le Meridien) ஹோட்டலில் நடைபெற்ற சிலாங்கூர் 2027 பட்ஜெட் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்திற்குப் பிறகு அவர் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி ஸ்திரத்தன்மையைப் பேணி வருவதாக அமிருடின் கூறினார்.நமக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. நமக்கு வழங்கப்பட்ட ஆணையை நாம் முழுமையாக நிறைவேற்றி, முடிந்தவரை சிறந்த சேவையை வழங்க வேண்டும்.

“போட்டி இன்னும் முடிவடையாத நிலையில், தோல்வி மனப்பான்மையுடன் செயல்படுவது புத்திசாலித்தனமான முடிவல்ல,” என்று அவர் கூறினார்.

நஜிப்பிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டால், அமைச்சரவையில் உள்ள டிஏபிஉறுப்பினர்கள் பதவி விலக வேண்டும் என்று கோலாலம்பூர் DAP பொருளாளர் பென் ஃபோங் விடுத்த அழைப்பிற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

Scroll to Top