Vimarsagan Media

Home » Malaysia » பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கண்டது: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த உலகமும் கண்டது: அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்

பொதுமக்களுக்கான உள்கட்டமைப்பை பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அறிக்கை அது. மிகவும் பிரிவினைவாத சூழல் நிலவும் உலகில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்றது என்றும், அந்த சூழலிலும் தாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க முடிந்தது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார். இந்தியாவின் தலைமையின் கீழ் நடைபெற்ற இந்த மாபெரும் நிகழ்வு வெற்றிகரமாக அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர், “பிரிக்ஸ் உச்சிமாநாடு எதிரெதிர் கருத்துக்கள் நிறைந்த உலகில் நடைபெற்றது; அங்கு இரண்டு முக்கிய மோதல்கள், பெரிய பிளவுகள் மற்றும் மிகவும் வலுவான கருத்துகள் மற்றும் நலன்கள் இருந்தன. இந்த துருவமயமாக்கலுக்கு மத்தியிலும், நாங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்கினோம்.

உற்றுநோக்கினால், அன்றைய தினத்தின் மிகக் கடினமான விவகாரம் மேற்கு ஆசிய மோதலாக இருந்தது. ஆனால், அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அறிக்கையை எங்களால் வெளியிட முடிந்தது,” என்று கூறினார்.

உச்சிமாநாட்டின் வெற்றியை உலகமே கண்டது:தொடர்ந்து பேசிய அவர், “அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, நீண்டகால புரிதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளின் சீரான இயக்கம், எரிசக்தி விநியோகம், அத்துடன் பொதுமக்களு க்கான உள்கட்டமைப்பை பாதுகாத்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அறிக்கை அது.

வேறு சூழல்களில் ஒருவேளை சந்தித்திருக்காத தலைவர்கள் இந்த உச்சிமாநாட்டின் போது சந்தித்தனர். இது முக்கியமான விவகாரங்கள் குறித்த உலகளாவிய கலந்துரையாடலுக்கு பெரும் பங்களிப்பை அளித்தது. பிரிக்ஸ் (BRICS) இந்தியா உச்சிமாநாட்டின் வெற்றியை ஒட்டுமொத்த தேசமும், ஏன் உலகமே கூட கண்டது,” என்றும் அவர் கூறினார்.

Scroll to Top