சிபு: ஜாலான் லானாங்கில் உள்ள ஒரு வங்கியின் உடைந்த கண்ணாடிக் கதவு சுடப்பட்டதாக நம்பப்படும் சம்பவத்திற் கான காரணத்தையும், தொடர்புடைய சந்தேக நபர்களையும் அடையாளம் காண போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிபு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி சுல்கிப்லி சுஹைலி ஒரு அறிக்கையில், சம்பவ இடத்தில் தனது தரப்பினர் மேற்கொண்ட ஆய்வில், சம்பவத்துடன் தொடர்புடையதாக நம்பப்படும் ஒரு தோட்டா உறை மற்றும் ஒரு தோட்டா கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஒருவரிடமிருந்து புகார் கிடைத்ததை சிபு மாவட்ட காவல்துறை தலைமையகம் உறுதிப்படுத்தியது.
“சாட்சிகளின் வாக்குமூலங்களின்படி, மோட்டார் சைக்கிளில் இரண்டு பேர் சென்று கொண்டிருந்தனர், அவர்களில் ஒருவர் தப்பிச் செல்வதற்கு முன்பு கைத்துப்பாக்கி என நம்பப்படும் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுட்டார்,” என்று அவர் கூறினார். முன்னதாக, சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், நேற்று பிற்பகல் 3 மணியளவில் நடந்ததாக நம்பப்படும் இச்சம்பவம் காட்டப்பட்டது.




