Vimarsagan Media

Home » Malaysia » மண்டரின் மொழிப் புலமை, பாரிசானிடமிருந்து பெர்தாங்கைக் கைப்பற்ற உதவும் என நம்பிக்கை

மண்டரின் மொழிப் புலமை, பாரிசானிடமிருந்து பெர்தாங்கைக் கைப்பற்ற உதவும் என நம்பிக்கை

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேசனலிடமிருந்து பெர்தாங் (Pertang) தொகுதியைக் கைப்பற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக, பாகாத்தான் ஹராப்பான் (PH) வேட்பாளர் அம்ரி அப்துல் கோயிஸ் (Umry Abdul Khois) தனது சரளமான மண்டரின் மொழித் திறனைப் பயன்படுத்திக்கொள்கிறார்.

பெர்தாங் தொகுதியில் 65.5% வாக்காளர்களைக் கொண்ட மலாய் வாக்காளர்களைத் தொடர்ந்து அணுகி அவர்களின் ஆதரவைப் பெற முயற்சிப்பதாக பிகேஆர் கட்சியைச் சேர்ந்த அந்த வேட்பாளர் கூறினார்.

இருப்பினும், அம்னோவின் (Umno) கோட்டையாகத் திகழும் இத்தொகுதியில் 20.1% வாக்காளர்களைக் கொண்ட சீன சமூகத்தினரிடையே வாக்கு சேகரிக்க, தனது மண்டரின் மொழித் திறன் தனக்கு உதவியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“அதிர்ஷ்டவசமாக, SJKC பெர்தாங் பள்ளியில் பயின்றதால் எனக்கு மண்டரின் மொழியில் சரளமாகப் பேசும் திறன் உள்ளது. நான் பெர்டாங்கிலேயே வசிக்கிறேன், என் குடும்பத்தினர் அனைவரும் இங்கேயே வசிப்பவர்கள்,” என்று அவர் எப் எம்டியிடம் கூறினார்.

1964-ஆம் ஆண்டு முதல் அம்னோவின் கட்டுப்பாட்டில் உள்ள இத்தொகுதியைக் கைப்பற்ற அம்ரி, மாநில பாரிசான் தலைவர் ஜலாலுதீன் அலியாஸ் மற்றும் பெர்சத்து வேட்பாளர் ஃபைசல் ஃபட்லி இத்ரூஸ் ஆகியோர் போட்டியிடு கின்றனர்

Scroll to Top