ஜொகூர், ஃபாரஸ்ட் சிட்டியில் உள்ள ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) உடன் தொடர்புடைய வெளிநாட்டி னரிடையே கடப்பிதழ் (பாஸ்போர்ட்) தவறாகப் பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று குடிநுழைவுத்துறை கண்டறிந்துள்ளது; நூற்றுக்கணக்கான நபர்களிடம் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட ஆய்வு களுக்குப் பிறகு இத்தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விசாரணையின் ஒரு பகுதியாக 300-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரிடம் ஆய்வு நடத்தப்பட்டதாக குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் டத்தோ சகாரியா ஷாபான் தெரிவித்தார்.
“குடிநுழைவுத் துறை பதிவுகளின்படி, நெட்வொர்க் ஸ்கூலுடன் தொடர்புடைய 430 நபர்கள் அடையாளம் காணப்பட் டனர்.”அவர்களில் 210 பேர் இன்னும் மலேசியாவில் உள்ளனர்; அதேவேளையில் 201 பேர் நாட்டை விட்டு வெளியேறியது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது.
“மேலும், நடமாட்டத்தைக் கண்டறிய முடியாத நிலையில் 19 நபர்கள் உள்ளனர்,” என்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 21) இங்கு நடைபெற்ற 104-வது குடிவரவுத் துறை தின விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர் களிடம் அவர் கூறினார்.
தகவல் கிடைக்காத அந்த நபர்கள் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்திருக்கலாம் அல்லது வெளியேறியிருக்கலாம் என்று கூறிய அவர், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை அறிய மேலதிக விசாரணை கள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
“அவர்கள் இன்னும் நாட்டிற்குள் இருக்கிறார்களா அல்லது மலேசியாவை விட்டு வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதிப்படுத்த எங்கள் விசாரணையைத் தொடருவோம்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் கடவுச்சீட்டு அல்லது அடையாள ஆவணங் கள் தவறாகப் பயன்படுத்தப் பட்ட சம்பவங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டதா என்று கேட்டதற்கு, இதுவரை அத்தகைய சம்பவங்கள் எதுவும் இல்லை என்று சகாரியா பதிலளித்தார்.




