கடந்த 1998-ஆம் ஆண்டில் தனது கல்லூரி நண்பரான லாரி பேஜ் உடன் இணைந்து கூகுள் நிறுவனத்தை தொடங்கினர். பிரபல தொழிலதிபரும் சிறந்த கம்ப்யூட்டர் என்ஜினீயருமான செர்ஜே பிரின், அனைர்துலக நிதி ஊடகமான போர்ப்ஸ் வெளியிட்ட உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். கூகுள் நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட சாதகமான மாற்றங்களைத் தொடர்ந்து, அமேசான் அதிபர் ஜெப் பெசோஸ் மற்றும் மைக்கேல் டெல் ஆகியோரை பின்னுக்குத் தள்ளி 3-ம் இடம் பெற்றுள்ளார்.
நாம் அனைவரும் உலக விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ள கூகுள் நிறுவனத்தை உருவாக்கி யது லாரி பேஜ் மற்றும் செர்ஜே பிரின் ஆவார்கள். பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் சிலரால்தான் அதனை சாத்தியமாக்க முடியும். அந்த வரிசையில் தற்போது கூகுள் நிறுவனத்திற்கு சொந்தக் காரரான செர்ஜே பிரின் அனைர்துலக அளவிலான கோடீஸ்வரர் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.




